தமிழகத்தில் மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமல் – அரசு தகவல்!!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மே 1ம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் வெற்றி கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் வாக்கு எண்ணிக்கை, கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் ஆளுநர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
மே 15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!!
அதற்கான முன்பதிவுகளும் தொடங்கி உள்ளது. இன்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், மே 1ம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டறிந்த நீதிபதிகள் முழு ஊரடங்கு தொடர்பான இறுதி முடிவினை நாளைக்குள் அறிவிக்க கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.