தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு? பொதுமக்கள் குழப்பம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக மே 1ம் தேதி முதல் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் அது தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது பொதுமக்களை குழப்பமடைய செய்துள்ளது.
முழு ஊரடங்கு குழப்பம்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி 15 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் தியேட்டர்கள், பார்கள், சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் மீண்டும் மினி ஊரடங்கு உத்தரவு? பிரதமர் இன்று ஆலோசனை!!
இருப்பினும் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையில் வருகிற மே 2ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா பரவல், வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக வரும் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும் மே 1ம் தேதி (சனிக்கிழமை) இறைச்சி, மீன் கடைகளை மூட வேண்டும் அரசு உத்தரவிட்டு உள்ளது. முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக இருந்தால் இந்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை.
மே 11 வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!
இதனால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே அரசு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முழு ஊரடங்கு குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை இன்று முழு ஊரடங்கு காரணமாக அரியலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலில் மக்கள் வெளியே செல்வதால் யாருமே கடை பிடிக்கவில்லை. வண்டியில் பயண செய்து தான் இருக்கிறார்கள்.