தமிழகத்தில் மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!

1
தமிழகத்தில் மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம், சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கட்டுப்பாடு நடவடிக்கையாக மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு போல் இல்லாமல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக பதிவாகியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன் படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்று கிழமை முழு  ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து ஞாயிறு ஊரடங்கு காரணமாக இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 2 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை எஸ்.ஐ தேர்வுகளில் முறைகேடு? நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து ஆளுநர், தலைமை செயலாளர் ஆகியோர் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள தளர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. மேலும் உயர் நீதிமன்றம் அறிவுரையின் படி, மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1500 நிவாரண நிதி – மாநில அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அன்று மாலை தமிழகத்தை ஆளப்போகும் புதிய கட்சி குறித்து தெரிந்துவிடும். அதன் பின்னர் அந்த கட்சி ஆட்சிக்கு வந்து கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்யும். இந்நிலையில் அதுவரை சில கட்டுப்பாடுகள் விதிக்க தலைமை செயலாளர் முடிவு செய்துள்ளார். மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!