தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்வது அவசியம் – கொரோனா ஒழிப்பு!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் மற்றும் 3ம் அலையை தவிர்க்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கிய சிறிது நாட்களில் தொற்று தீவிர நிலையில் பரவத் தொடங்கியது. முதல் அலையில் இல்லாத அளவிற்கு சிறிது நாட்களிலேயே அதிக அளவில் பாதிப்புகள் பதிவாக தொடங்கியது. இதனால் கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. அப்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் காலை 10 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்களின் அலட்சியத்தினால் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
தீபாவளி வரை ரேஷன் பொருட்கள் இலவசம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!
இதனால் மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை ஜூன் 7 ம் தேதி வரை அறிவித்தது. அப்போது சில நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியது. இருப்பினும், தொடர்ந்து நன்கு பாதிப்புகள் குறைக்கும் நோக்கில் ஜூன் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தினசரி பாதிப்பு 35,000 கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 21,000 க்கும் குறைவாக பதிவாக தொடங்கியுள்ளது.
ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – கடைகள், அலுவலகங்கள் திறக்க அனுமதி!!
இது ஒரு புறம் இருக்க தடுப்பூசி போடுவதற்கு அரசு அதிக அளவில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 4.45 கோடி பேர் மட்டுமே தமிழகத்தில் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 17.92 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில், 2.58 கோடி பேர் மட்டுமே, 18 முதல், 44 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த நிலை நீடித்தால், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போட்டு முடிக்க, பல மாதங்களாகும்.
TN Job “FB Group” Join Now
கொரோனாவிற்கு மனிதர்கள் பலியானது மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்கள் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதில், 1 சிங்கம் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களுக்கு பொதுமக்கள் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், திருமண நிகழ்ச்சிகள், இறப்புகள், திருவிழாக்கள், அரசியல் ரீதியான நிகழ்ச்சிகள் மற்றும் கடை தெருக்களில் அதிக அளவில் கூட்டம் கூடாமல் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா உறுதி – 463 பேர் பலி!!
தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து சில மாதங்களுக்கு நீடித்தால் மட்டுமே நாம் 3ம் அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். கொரோனாவின் 2ம் அலையின் தாக்கத்தில் இருந்தே நம்மால் இன்னும் மீள முடியவில்லை. தொடர்ந்து 3ம் அலையின் தாக்கம் வந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவில் பாதிப்புகள் இருக்கும். அதனை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் இதை போன்ற தீவிர கட்டுப்பாடுகளை அவசியம் தொடர வேண்டும். பொதுமக்களும் தங்களின் சமூக பொறுப்பை உணர்ந்து பரவல் சங்கிலியை உடைக்க முயற்சிக்க வேண்டும்.