தமிழகத்தில் ஜூன் 21 முதல் பேருந்து சேவைக்கு அனுமதி? தளர்வுகள் எதிர்பார்ப்பு!

0
தமிழகத்தில் ஜூன் 21 முதல் பேருந்து சேவைக்கு அனுமதி? தளர்வுகள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் ஜூன் 21 முதல் பேருந்து சேவைக்கு அனுமதி? தளர்வுகள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் ஜூன் 21 முதல் பேருந்து சேவைக்கு அனுமதி? தளர்வுகள் எதிர்பார்ப்பு!

தமிழகம் முழுவதும் வருகிற ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அதன் பின்னர் பேருந்து சேவைக்கு அனுமதி மற்றும் மதவழிபாட்டு தலங்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறப்பு உள்ளிட்ட தளர்வுகளை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவானது இடையிடையே பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் தினசரி மாலை 5 மணிவரை கடைகள் திறப்பு, அரசு அலுவலகங்கள் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் இயங்க அனுமதி மற்றும் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அமலில் உள்ளன.

ஜியோ (Jio) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பைபர் போஸ்ட்பெய்ட் சலுகை!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் ஜூன் 21ம் தேதிக்கு பின்னரான ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

ஜூலை 1 முதல் அரசு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

இதனால் வரக்கூடிய ஊரடங்கில் குறிப்பிட்ட அளவு பேருந்து சேவைகளுக்கு மாவட்டத்திற்குள் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் பக்தர்கள் வழிபாட்டுக்காக மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, பிற 27 மாவட்டங்களில் இத்தகைய தளர்வுகளை அளிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் கொரோனா 3வது அலை வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு டேப் – அமைச்சர் அறிவிப்பு!

எனவே ஒவ்வொரு தளர்வுகளை அறிவிக்கும் முன்னர் அரசு அது தொடர்பாக தீவிரமாக ஆராய்வது அவசியம். கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகளவு தாக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அரசு முன்னெடுத்து உள்ளது. பொதுமக்கள் ஆகிய நாம் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றினால் விரைவில் கொரோனா எனும் கொடிய அரக்கனிடம் இருந்து விடுபடலாம் என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!