தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு கிடையாது – சுகாதாரத்துறை விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலுக்கு சுகாதாரத்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு வதந்தி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் நோய்த்தொற்று குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள் செயல்பட தொடங்கின. தற்போது கொரோனா 2வது அலை தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2000ஐ நெருங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு – அரசு தேர்வுத்துறை ஆலோசனை!!!
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை காலவரையற்ற விடுமுறை வழங்கி ஆன்லைன் வகுப்புகளை தொடர அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேரங்களில் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக தற்போது சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முகக்கவசங்களை அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது. நோய் பாதிப்பு உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் மட்டும் ஊரடங்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
ஊரடங்கு போடுங்க
ஊரடங்கு வேனும்