தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் (ஜூன் 21 வரை) நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மே 10ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் வழக்கம் போலவே காணப்பட்டது. எனவே கொரோனா நோய் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே சென்று தினசரி 35 ஆயிரம் பேர் வரை தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – என்னென்ன தளர்வுகள்?
இதனால் சுகாதாரத்துறை பரிந்துரையின் பேரில், ஊரடங்கில் தளர்வுகளை நீக்க அரசு முடிவு செய்தது. அதற்காக மே 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க கடைகளை திறக்கவும், சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளும் இயங்க 2 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு வாரம் பின்பற்றப்பட்ட தீவிர ஊரடங்கில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதன் பலனாக தினசரி தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. பின்னர் ஜூன் 7 முதல் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. தினசரி மாலை 5 மணிவரை கடைகளை திறக்கவும், சுயதொழில் புரிவோர் இ-பதிவு பெற்று மாவட்டத்திற்குள் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்ளுடன் இயங்க தொடங்கின. சார்பதிவாளர் அலுவலகங்களில் தினசரி 50 டோக்கன்கள் வழங்கி பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தேவையின்றி வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதித்து அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அரசின் இந்த தீவிர நடவடிக்கைகளின் பலனாக தற்போது கொரோனா நோய்த்தொற்று சற்று குறைந்துள்ளது. இதனால் ஜூன் 14ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து நேற்று முதல்வர் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LPG சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் கவனத்திற்கு – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!!
அதில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் பேரில் தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கவும், பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் குறிப்பிட்ட நேரம் திறப்பு, நடைப்பயிற்சிக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பு இன்று வெளியாகும்.