தமிழகத்தில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

3
தமிழகத்தில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே ஜூன் 28ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலம் (ஜூலை 5 வரை) நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகம் முழுவதும் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10ம் தேதி முதல்முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது படிப்படியாக பல்வேறு கட்ட தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டே வந்தது. இறுதியாக ஜூன் 21ம் தேதி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு விகிதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – இணை இயக்குனர் சுற்றறிக்கை!

அதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. பாதிப்பு சற்று குறைவாக உள்ள 23 மாவட்டங்களில் கடைகள் திறப்பிற்கு கூடுதல் நேரம், நிர்வாகப் பணிகளுக்காக பள்ளி, கல்லூரிகள் திறப்பு, அத்தியாவசிய அரசு அலுவலகங்கள் முழுவீச்சில் செயல்படுதல், தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேருந்து சேவைகள் தொடங்க அனுமதிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மாணவர்கள் ஏக்கம்!

மாற்றாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் 50% பயணிகள் அமர்ந்து பயணிகள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள், மெட்ரோ ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளது. இதனால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் வழிபாட்டு தலங்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரமாக குறைந்து உள்ளது. இதனால் வருகிற ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழக மின்வாரிய சார்பில் வெளியான அறிவிப்பு – மின்தடை பகுதிகள்!

இது தொடர்பாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர் குழு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து வழிபாட்டு தலங்கள் திறப்பு, பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!