தமிழகம் முழுவதும் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
தமிழகம் முழுவதும் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் தமிழகம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் தொடக்கத்தில் தினசரி பிற்பகல் 12 மணிவரை கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. பின்னர் இது 2 மணிநேரம் குறைக்கப்பட்டது.
பழைய 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.25,000 பெறும் முறை – தவறாமல் படிங்க!
இருப்பினும் பொதுமக்கள் கடைகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனை கவனித்த அரசு மே 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி தீவிர முழு ஊரடங்கை 2 வார காலம் அமல்படுத்தியது. மேலும் தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்தது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
TN Job “FB Group” Join Now
மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமை, தேவையின்றி வெளியே சுற்றுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே அரசு ஊரடங்கை தளர்த்த முடிவு செய்து, ஜூன் 7 முதல் கடைகளை மாலை 5 மணிவரை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் சுயதொழில் மேற்கொள்பவர்கள், வாடகை டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் இயங்க அரசு அனுமதித்துள்ளது. இருப்பினும் பேருந்து போக்குவரத்திற்கு தடை தொடர்ந்து நீடிக்கிறது.
ஜூன் 14 முதல் இரவு, வார இறுதி முழு ஊரடங்கு அமல் – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
இந்நிலையில் இன்று (ஜூன் 14) முதல் மேலும் ஒரு வார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மறுபுறம் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், டீ கடைகள் திறக்கவும், சலூன், அழகு நிலையங்கள் மாலை 5 மணிவரை செயல்படவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இ-சேவை மையங்களும் இன்று முதல் செய்லபட உள்ளது.