தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று (மார்ச் 31) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வரும் நிலையில், அது மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் முழு பொது முடக்கம் பின்பற்றப்பட்டது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் விளைவாக மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. உரிய வருமானம் இன்றி பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிக்கு உள்ளாகினர். ஒவ்வொரு முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் பொழுது புதிய தளர்வுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2ம் கட்ட மாதிரித்தேர்வு – முக்கிய முடிவு!!
அதன் அடிப்படையில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் தொடங்கப்பட்டு விட்டன. இதனால் புத்தாண்டு முதலே இயல்பு நிலை திரும்பி வருகிறது. பின்னர் தினசரி கொரோனா பாதிப்பும் கடந்த 2 மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது. இந்நிலையில் மார்ச் மாத கடைசி வாரத்தில் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த 4 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ தாண்டி உள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தற்போது தேர்தல் பிரச்சாரம், பரப்புரைகள் நடைபெற்று வரும் காரணத்தால் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். சென்னை ஆணையர் அவர்கள், தேர்தலுக்கு பின்னர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு – எளிய வழிமுறைகள்!!
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று (மார்ச் 31) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி ஊரடங்கில் தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்குமா? அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என தெரிய வரும்.