தமிழகத்தில் ஜூன் 21க்கு பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி உறுதி செய்யப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல்முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கடைகளை குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கடை வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் வழக்கம் போலவே காணப்பட்டது. இதன் விளைவாக கொரோனா நோய்த்தொற்று பரவலும் கட்டுக்குள் வரவில்லை. தினசரி அதிகபட்சம் 35 ஆயிரத்திற்கும் மேல் புதிய பாதிப்புகள் பதிவாகியது. 480க்கும் மேல் உயிரிழப்புகள் ஏற்பட்டது.
ஜூலை 1 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இதனை கட்டுப்படுத்த எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு 2 வார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டது. தேவையின்றி வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். இதன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. மறுபுறம் ஊரடங்கு உத்தரவும் சில தளர்வுகளுடன் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதிலும் தனியார் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்திற்கு தொடர்ந்து தடை நீடித்தது.
TN Job “FB Group” Join Now
இது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. பின்னர் டாஸ்மாக், தேநீர் கடைகள், அழகு நிலையங்கள் ஜூன் 14ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதற்கிடையில் முதல்வர் அவர்கள் வெளியிட்டு இருந்த வீடியோ பதிவில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் படிப்படியாக பேருந்து சேவை, பள்ளி, கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படாவிட்டால் தளர்வுகள் திருப்பி பெறப்படும் எனவும் எச்சரித்தார்.
அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க அனுமதி – அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவிலான தளர்வுகள் மட்டுமே அமலில் உள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் இன்று காணொளிக்காட்சி வாயிலாக காலை 11 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது, ஜூன் 21க்கு பிறகு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.