தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

2
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - நாளை முதல் அமல்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - நாளை முதல் அமல்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

தமிழகம் முழுவதும் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் அளிக்கப்பட்டு உள்ள தளர்வுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அனுமதிக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. இதில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. எனவே மே 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் மருந்தகங்கள், ஹோட்டல்கள் (பார்சல் மட்டும்) தவிர வேறு எவ்வித கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இதன் விளைவாக பாதிப்பு எண்ணிக்கை பாதியாக தற்போது குறைந்துள்ளது. மேலும் ஜூன் 7 முதல் கூடுதல் தளர்வுகள் அமலாகி உள்ளதால் கடைகள் மாலை 5 மணிவரை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஊரடங்கு நாளை (ஜூன் 14) காலை 6 மணியுடன் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்ட்டு உள்ளது. இதில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் தளர்வுகள் வழங்கி உள்ளது அரசு.

TN Job “FB  Group” Join Now

ssc

இதில் கொரோனா நோயாளிகள் அதிகளவு சிகிச்சை பெற்று வரும் 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை உட்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு மற்றும் குளிர்சாதன வசதி உள்ள சலூன் கடைகள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகளை திறந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. தமிழக முதல்வர் அவர்களே நாளை முதல் மீண்டும் ஒரு வாரம் ஊடரங்கு அமல் படுத்தி உள்ளீர்கள் இதற்குப் பெயர் ஊடரங்கு அல்ல .அனைத்து கடைகளும் திறப்பதாக அறிவித்து உள்ளீர்கள் .நீங்கள் செய்த இந்த செயலினால் தமிழ்நாட்டில் மேலும் நோய் தொற்று அதிகமாகும் என்பதை நினைவுபடுத்துகிறேன் ..இதை தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறேன் தமிழ்நாட்டில் இன்னும் பாதி மக்கள்தொகை ஜனத்திற்கு கூட இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை .அப்படியிருக்கும் நிலையில் ஏன் தளர்வுகள் உடன் ஊடரங்கு சரியா .

    • த.அரசு மக்களின் நன்மைக்காக விதித்தது ஊரடங்கு
      ஆனால் இம் மக்கள் அதனை ஒத்துழைப்பு தராமல் இந்நோயினை அதிகரிக்க இந்நோய்க்கு உதவுகின்றனர்

      “தனித்திரு வீட்டில் இரு”

      எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை
      அனைவரும் வெளியில் தான் செல்கின்றனர்

      எனது தாழ்மையான வேண்டுகோள்

      இனி ஊரடங்கு வேண்டாம்

      அவர் அவர் அவர் அவர்களை பார்த்துக் கொள்ளட்டும்

      நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!