தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமலுக்கு வந்த தளர்வுகள்!!

1
தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - இன்று முதல் அமலுக்கு வந்த தளர்வுகள்!!
தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - இன்று முதல் அமலுக்கு வந்த தளர்வுகள்!!
தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமலுக்கு வந்த தளர்வுகள்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று காலை முதல் ஜூலை 19ம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையை சரி செய்ய மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இறுதியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது.

இரவு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு ரத்து – பஞ்சாப் அரசு அறிவிப்பு!

இருந்தபோதிலும் மாநிலம் முழுவதும் தொற்று பரவும் நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது அவசியம் என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 19 வரை அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் & தளர்வுகள்:

  • திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.
  • கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்கள் நோய் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள செயல்முறைகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கடைகளும் மற்றும் அதன் செயல்பாடுகளும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளுக்கான எழுத்துத் தேர்வுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள், நடைபாதை கடைகள் ஆகியவை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட போட்டித் தேர்வுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
  • திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை.
  • மதுக்கூடங்கள், சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலை, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
  • பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்க தடை தொடரும்.
  • மாநிலங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து சேவைக்கான தடை தொடரும். இருப்பினும் இன்று முதல் புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவைகள் தொடங்க உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!