தமிழகத்தில் ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் – ஜூலை வரை நீட்டிப்பு!!
தமிழகத்தில் ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பபடும் என கற்போம் எழுதுவோம் இயக்கம் தெரிவித்துள்ளது.
கற்போம் எழுதுவோம்:
தமிழகத்தில் கற்போம் எழுதுவோம் இயக்கம் மூலமாக 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்வியில் ஆர்வமுள்ளவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி செல்ல முடியாதவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கும் பள்ளிகளை போல பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வும் வைக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த இயக்கத்தின் தேர்வானது கொரோனா காரணமாக மே 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போதைய கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருவதால் இதனை கருத்திற்கொண்டு ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் வருகின்ற ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் – ஏற்பாடுகள் தீவிரம்!!
தற்போதைய சூழ்நிலையில் நேரடி வகுப்புகளுக்கு அரசு தடை விதித்துள்ளதால், இத்திட்டத்திற்கான பாடங்கள் ஏப்ரல் 26 முதல் கல்வி தொலைக்காட்சியில் மாலை 7 மணி முதல் 7.30 வரை ஒளிபரப்பப்படும் என ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்