தமிழகத்தில் நாளை 10,000 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் – சென்னையில் 1,600 இடங்கள் ஏற்பாடு!
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 12) ஒரு நாள் மட்டும் 10,000 சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1,600 முகாம்கள் சென்னையில் அமைக்கப்பட இருக்கிறது.
தடுப்பூசி முகாம்கள்
நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினசரி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை (செப்டம்பர் 12) ஒரு நாளில் 10,000 கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
இதில் சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னையில் சுமார் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருப்பதாகவும், தடுப்பூசி போடும் பணிகளில் சுமார் 600 மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செப்.30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் பொது மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் சென்னையில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 5,800 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக சென்னை மாநகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று, 400 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 1,35,000 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி மட்டும் இதுவரை 43,71,309 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.