தமிழகத்தில் குறையும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறை தகவல்!!
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் குறைவு :
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. மேலும் மக்களுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான விழிப்புணர்வும் சுகாதார பணியாளர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனோ பரவல் உச்சத்தில் இருந்து வந்தது. நாள் ஒன்றிற்கு 15,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முக்கிய இடத்தில் இருந்து வந்தது. ஆனால் தற்போது அரசின் கடுமையான கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு நாட்களில் தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 2ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை – தேர்தல் அதிகாரி தகவல்!!
மேலும் மக்கள் தொடர்ந்து அரசின் நடைமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் மாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களின் தொடர் ஒத்துழைப்பால் மட்டுமே இன்னும் தொற்று பரவலை குறைக்க முடியும் என செய்தியார் சந்திப்பில் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்