தமிழக மாணவர்களுக்காக அரசின் சூப்பர் திட்டம்.. இனி படித்துக்கொண்டே சம்பாதிக்கலாம்!
தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் அவர்களின் நலன் கருதி அறிவித்து வருகிறது. அந்த வகையில், கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் புதிய அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்தம்:
தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல திட்டங்களை அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் வெளியிட்ட அதிகாரிகளுக்கான உத்தரவில், அரசின் திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு வெறும் அறிவிப்பாக மட்டும் அவை இல்லாமல், மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவர்கள் வரை சென்றடைய வேண்டும் என்றும், இதற்கு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
Follow our Instagram for more Latest Updates
அதேபோல், அனைத்து திட்டங்களும் முறையாக தகுதியானவர்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமையில், தலைமை செயலகத்தில் என்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ, பாலிடெக்னிக் பயிலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே வேளையில் சேர்ந்து சம்பாதிக்கும் வகையிலான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான கூட்டம் நடந்தது.
ரேஷன் கார்டு இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான் – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதன்படி, மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளை படித்துக் கொண்டிருக்கும் போதே பணிபுரிய எதுவாக, மெண்டோ (ஸ்ரீ பெரும்புதூர்) நிறுவனம், கண்ணபிரான் மில்ஸ் (கோவை, மதுரை, பெருந்துறை), வீவீடி என் (பொள்ளாச்சி), கேஜி குரூப் ( கோவை), லட்சுமி மிஷன் ஒர்க்ஸ் ( கோவை) போன்ற 6 தனியார் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1560 மாணவர்கள் பலனடைவார்கள் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.