தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடாது – திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம்!!
தமிழகத்தில் நாளை பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து இருந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டம்:
தமிழகத்தில் ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த போக்குவரத்து துறை ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை (பிப்ரவரி 25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால் 80 சதவிகித பேருந்துகள் இயங்காது என கூறப்பட்டது.
பிப்.,28 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இந்நிலையில் நாளை பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து உள்ளது. மேலும் நாளை விடுப்பு எடுக்கக் கூடாது எனவும், ஏற்கனவே விடுப்பு எடுத்துள்ள ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாளை விடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்கள் மீது உரிய துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை ஊழியர்கள் கூறுகையில், திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். 95 சதவீத தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும், பொதுமக்கள் இதற்கு ஆதரவு தருமாறும் அவர்கள் கோரி உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்