தமிழகத்தில் மின்சார வாகன விலை 15% உயர்வு – புதிய கொள்கை எப்போது வெளியாகும்?

0
தமிழகத்தில் மின்சார வாகன விலை 15% உயர்வு - புதிய கொள்கை எப்போது வெளியாகும்?
தமிழகத்தில் மின்சார வாகன விலை 15% உயர்வு - புதிய கொள்கை எப்போது வெளியாகும்?
தமிழகத்தில் மின்சார வாகன விலை 15% உயர்வு – புதிய கொள்கை எப்போது வெளியாகும்?

தமிழகத்தில் அனைத்து மின் வாகனங்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் டிசம்பர் 2022 வரை 100% மோட்டார் வாகன வரி கட்டுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது இதன் காலம் முடிவடைந்த நிலையில் மின்சார வாகனங்களின் விலை அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார வாகனம்

தமிழக அரசு கடந்த 2020ம் ஆண்டு மின்சார வாகன கொள்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையில், புகை, மாசு இல்லாத சுற்றுச் சூழலை உருவாக்க பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 2020ம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் 2022 வரை மோட்டார் வாகன வரி கட்டுவதற்கு 100% விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 40 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி – மத்திய அரசு ஷாக் தகவல்!

Follow our Instagram for more Latest Updates

அதன்படி தற்போது 100% மோட்டார் வாகன வரி கட்டுவதற்கு விலக்கு கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் புதிய கொள்கையை அரசு வெளியிட வேண்டும். ஆனால் இதுவரை இதற்கான கொள்கை குறித்த முடிவு எடுக்கப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விலை அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இன்றைய மின்சார வாகனங்களின் விலையை விட 15% வரை உயரும் என கூறப்படுகிறது. அதனால் இது தொடர்பாக விரைவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!