தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி – வலுக்கும் கோரிக்கை!

தமிழக அரசு துறை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடிக்கடி அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தர்ணா போராட்டம்:

தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒப்பிடுகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பலன்கள் குறைவாக இருப்பதாக நினைத்தனர். இதனால், மீண்டும் பல ஆண்டுகளாக இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி சாதாரண அரிசி இல்லைங்க! ஸ்பெஷல் தான்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் தலைவர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அந்த கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், அரசு பணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் குறித்து வரன்முறை செய்ய வேண்டும் என்றும், புதிய ஓய்வூய்திய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள 4 லட்சம் அரசு துறை காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசின் நிர்வாக கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 23ம் தேதி 7 மணடலங்களில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!