தமிழகத்தில் அனைத்து ரேஷன் தாரர்களுக்கும் ரூ.1000 பரிசு – மாநில அரசின் சூப்பர் திட்டம்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று அளிக்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டில் மக்களுக்கு ரொக்கப்பணம் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மக்களுக்கு பொங்கல் வைக்க தேவையான மற்றும் அன்றாட சமையலுக்கு தேவையான 21 மளிகை பொருட்களையும், ஒரு முழு கரும்பு மற்றும் வழக்கம் போல் இலவச வேஷ்டி, சேலையை வழங்கியது. ஆனால், மளிகை பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்ததாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் புகார்கள் எழுந்தது.
மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!
Exams Daily Mobile App Download
வரும் 2023ம் ஆண்டிலும் முன்னதாக இதேபோல், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க தான் அரசு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அரசு வழங்கும் இலவச ரேஷன் பொருட்களை தகுதி அற்றவர்கள் பெற்று வீணாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அரசின் திட்டம் முறையாக தகுதியானவர்களுக்கு கிடைக்க அரசு புதிய வழிமுறைகளை செயல்படுத்த உள்ளது. இதனை கடைபிடிக்காதவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.