தமிழகத்தில் ‘இந்த’ பணிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொல்லர், தச்சர் ஆகிய பணிகளில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச ஊதியம்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தற்போது பல்வேறு தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூலை 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்ப்பட்டு உள்ளதால் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமைப்பு சார்ந்த மற்றும் சாராத தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
தமிழக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் – பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!
அதன் பின்னர் காலணி தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முன்னதாக அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம், பிழைப்பூதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஆதார் கார்டில் எத்தனை முறை தகவல்களை அப்டேட் செய்ய முடியும்? முழு விபரம் இதோ!
தற்போது தமிழகத்தில் தச்சர், கொல்லர் ஆகிய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் சார்பில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.