பூங்காக்கள், கடற்கரைகளில் ஜனவரி 17 வரை பொதுமக்கள் கூட தடை – தமிழக அரசு உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் வரும் ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை பொதுமக்கள் கூட தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பண்டிகை விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் கூடினால் கொரோனா தொற்று அதிகளவில் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. இதில் பூங்காக்கள், கடற்கரைகளில் மீண்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
ஜனவரி 14 முதல் முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. இதில் காணும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் அதிகளவில் கடற்கரைகள், பூங்காக்களில் கூடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரி 16ம் தேதி காணும் பொங்கலன்று அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு – ஜனவரி முதல் அமல்??
தற்போது அந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை அனைத்து பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உருமாறிய கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்