நெற்பயிர்களுக்கான நிவாரணத் தொகை ரூ.20 ஆயிரமாக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் நெற்பயிர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்த புயல்கள் காரணமாக பயிர்கள் கடுமையான சேதமடைந்த நிலையில், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நெற்பயிர் நிவாரணத் தொகை:
கொரோனா பரவலுக்கு மத்தியில் அடுத்தடுத்து வந்த 2 புயல்கள் காரணமாக பயிர்கள் அதிகமாக சேதமடைந்தது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி வழங்கக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. மேலும் நிவர் புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய அரசு அதிகாரிகளிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
உயர்கல்வித் தகுதியை பல்கலைக்கழகம் நிர்ணயிக்கலாம் – நீதிமன்றம் உத்தரவு!!
அதன்படி மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி உடைய விவசாய நெற்பயிர்களுக்கான நிவாரணத் தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் இடுபொருள் நிவாரணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நீர்ப்பாசன வசதி பெற்ற மற்ற பயிர்களுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணமும் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு அறிவிப்பு – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.18,000இல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்