தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகை – சபாநாயகர் சொன்ன உறுதி தகவல்!

0
தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகை - சபாநாயகர் சொன்ன உறுதி தகவல்!
தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகை - சபாநாயகர் சொன்ன உறுதி தகவல்!தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகை - சபாநாயகர் சொன்ன உறுதி தகவல்!
தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகை – சபாநாயகர் சொன்ன உறுதி தகவல்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி சார்பில் மகளிருக்கான ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டிற்குள் கட்டாயம் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை அறிவிப்பு:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகிவிட்டது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சி சார்பில் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், கட்டாயம் மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அரசு வாக்குறுதி வழங்கியது.

ரயில்வே தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு… 2023ல் புதிய மாற்றம் – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இது குறித்து சென்னையில் 13வது உலக ஆசிரியர்கள் மாநாட்டை சபாநாயகர் அப்பாவு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகியோர் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் பேசிய சபாநாயகர், தமிழகத்தின் வருவாயை பெருக்கி திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவார் என தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டில் இல்லத்தரசிகளுக்கான ரூ. 1000 உதவித்தொகை கட்டாயம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!