தமிழகத்தில் மளிகை பொருட்கள் விற்க அனுமதி – இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக மளிகை பொருட்களை நடமாடும் வாகனங்கள், தொலைபேசி பதிவு, ஆன்லைன் பதிவு மூலமாக வீட்டிற்கே சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
வீடு தேடி வரும் பொருட்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டது. ஊரடங்கின் முக்கிய நோக்கம் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது. ஆனால் முழு ஊரடங்கு அறிவித்த போதிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. அதனால் மாநில முதல்வர் மே 31 வரை எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டார். காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் போன்றவை விற்கும் கடைகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? புதிய கல்வியாண்டு துவக்கம்!
இதற்கு பதிலாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க காய்கறி, பழங்கள் போன்றவற்றை வாகனங்கள் மூலம் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று விற்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மளிகை பொருட்களையும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்க அனுமதியளித்துள்ளது. விற்பனையாளர்கள் அனுமதி வழங்கப்பட்ட வார்டு பகுதியில் மட்டுமே விற்பனை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் விற்பனை அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பொதுமக்கள் நடமாடும் வாகனம், தொலைபேசி, ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைபேசி செயலி மூலமும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. காய்கறி வண்டிகள் மூலம் வியாபாரம் மேற்கொள்ளும் நபர்கள் அத்துடன் மளிகை பொருட்களையும் விற்பனை செய்யலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் மளிகை பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் டோக்கன் வாங்கி வியாபாரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.