தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – சார்பு செயலரின் பதில்!!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்த செயல்படுத்துவது குறித்து வல்லுநர் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாகவும், தற்போது இதை செயல்படுத்த வாய்ப்புகள் இல்லை எனவும் அரசு சார்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதுகுறித்து எந்த முடிவும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே அரசு சார்பு செயலாளர் கமலக்கண்ணன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் நடைமுறைபடுத்த திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 1.4.2003 அன்று அல்லது அதன் பின்னர் முறையான அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டதை நடைமுறைப்படுத்த உள்ள சாத்திய கூறுகளை பரிசீலனை செய்து அரசிடம் அனுமதி வழங்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
கொரோனா பரவல் எதிரொலி – ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசுகள்!!
ஆனால் அரசு ஊழியர்கள் இதனை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால் இது குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், “1.04.2003 அன்றோ அல்லது பின்னரோ பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அரசிற்கு பரிந்துரைகளை அனுப்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
அதனை பரிசீலனை செய்து உரிய முடிவினை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். எனவே தற்போது தங்களது கோரிக்கைகளை ஏற்கத்தக்கதல்ல என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.