தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் செப்டம்பர் மாதம் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பாடும் எனவும், இதனால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. பள்ளி படிப்பை விட மாணவர்களின் உடல்நிலையில் கூடுதல் அக்கறை செலுத்தி அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளபெரம்பூர் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் ஜூலை 31க்கு மேல் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஆலோசனை!
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் முதற்கட்டமாக உயர்நிலை பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் எனவும், பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யப்படும் என தெரிவித்த அவர் அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.