தமிழகத்தில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கான பணி நியமனம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான பணிநியமனம்:
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் வழங்கப்படாமல் உள்ள உபரி ஆசிரியர்களுக்கு பணிநியமனம் மறுக்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அங்கீகாரம் கோரியும், ஆசிரியர் அங்கீகாரம் மறுப்பதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் கட்டாயக்கல்வி சட்டத்தின் படி, ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:30 ஆக இருக்க வேண்டும். பணியிடம் என்பது ஒவ்வொரு பள்ளியும் தனித்தனி அலகாக பார்க்க வேண்டும். பல பள்ளிகள் இணைந்து ஒரே அலகாக பார்க்க கூடாது. அரசு பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தால் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் நிரப்ப வேண்டும்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் – தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!!
அதன் பின்னரும் உபரி ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் நிரப்ப வேண்டும். இந்த பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். மேலும் 2 மாதத்திற்குள் உபரி ஆசிரியர்கள் தேவைப்படும் பணியிடங்களை கணக்கெடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை செய்து முடித்த பின்னர் இதுகுறித்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை சமர்ப்பிக்க வேண்டும்”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.