தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சுழற்சி அடிப்படையில் பணி – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த தாக்கம் பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனை தடுக்க அரசு தரப்பிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணி என தொடர்ந்து வேலையாக உள்ளதால் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகள் தலைமை செயலருக்கு, தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகளில் புதிய நடைமுறைகள் – புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி!!
அதில், “ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சனிக்கிழமை விடுமுறை அளித்ததற்கு நன்றி. பெருந்தொற்று தொடர்ந்து பரவி வருவதை நாம் அறிவோம். மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராத இந்த நேரத்தில், ஆசிரியர்கள் வருகை பற்றிய மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவாறு தாங்களும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!!
தினசரி 30 சதவிகித ஆசிரியர்கள் சுழற்சி முறையிலும், தேர்வு பணி அடிப்படையிலும் தேவையின் அடிப்படையில் தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின் படியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்த வேண்டுகிறோம். நோய் தொற்று வேகமாக பரவும் இக்காலத்தில் ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி இவ்வழிகாட்டு நெறிமுறைகளை உடனே அறிவிக்க வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.