தமிழகத்தில் ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு – உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கக்கல்வி துறை சார்பில் நடத்தப்பட உள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வுகள் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தொடக்கக்கல்வி துறை கலந்தாய்வு:
தமிழக அரசு தொடக்க கல்வித்துறை சார்பில் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.சண்முகநாதன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவரது மனுவில், “தொடக்கக்கல்வி துறையில் பதவி முன்னுரிமை உள்ள ஆசிரியர்களும், சிறப்பு சிறப்பு முன்னுரிமை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கும் போன்றவர்களுக்கு பொது மாறுதல் மூலமாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் அதனை ரத்து செய்து தற்போது பணி மூப்பு இல்லாத இளையவர்களை பதவி உயர்வு அடிப்படையில் தேர்வு செய்வது என கல்வி இயக்குனரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்”, என அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் – அமைச்சர் அறிவிப்பு!!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கறிஞர் தரப்பில் வாதாடும் போது ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் எவ்வித பயணப் படியும் வழங்கப்படுவதில்லை, எவ்வித செலவினமும் அரசுக்கு ஏற்படுவதில்லை என்று கூறப்பட்டது. இந்த வாதங்களுக்கு பின் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ள அனைத்து கலந்தாய்வும் ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்