தமிழகத்தில் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 99.88% உள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 99.88% உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 99.88% உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 99.88% உள்ளது
அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு!!

மதுரையில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க கல்வி விகிதம் 99.88% உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

பள்ளிகளில் சேர்க்கை சதவிகிதம்:

மதுரை தூய மரியன்னை மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு 404 மாணவர்களுக்கு ரூ 16 லட்சத்து 33 ஆயிரம் செலவில் இலவச சைக்கிள் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,”தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக பல சிறந்த நலத்திட்டங்களை செய்கிறது. இதன்படி இலவச சைக்கிள், இலவச மதிய உணவு, புத்தகப்பை, காலனி உள்ளிட்ட 16 வகையான பொருள்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் அனைத்து துறைகளை காட்டிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் நான்கில் ஒரு பங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தொடக்க கல்வி சேர்க்கை 99.88% ஆகவும். உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49.6% ஆகா உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

‘பள்ளிகள் திறப்பு பற்றிய பெற்றோர்கள் கருத்தை நாளை தெரிவித்தே ஆக வேண்டும்’ – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!

மேலும் மாணவர்களின் படிப்பு பொருளாதாரம் காரணமாக நிறுத்தப்படுவதை தடுக்க மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் பள்ளி மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் தான் பள்ளி படிப்பிற்கான தனியாக தொலைக்காட்சி அலைவரிசை உருவாக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இதே போல அமைச்சர் செல்லூர் ராஜு பரவை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலந்து கொண்டு இலவச சைக்கிளை மாணவ மாணவியருக்கு வழங்கினார். அந்த விழாவில் கோட்டாட்சியர் முருகானந்தம், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சவுந்தர பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகமலை ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் பங்கஜம் நன்றியுரை ஆற்றினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!