அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி – பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு:
அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கிடாதிருக்கை அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் மதுரை உயர்நீதிமன்றத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளவை, “எனது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் இடம் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக ராமநாதபுரம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டேன். 2020 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. தற்போது பதிவு உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை அங்கீகாரம் – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!!
இதன் காரணமாக பலருக்கு பணி மாறுதல் ஏற்படும். எனவே பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்”, இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் பதவி உயர்வுக்கான சென்னையில் நடக்கவிருந்த கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்