தமிழக அரசு பள்ளிகளில் ‘கணினி அறிவியல்’ ஆசிரியர் பணியிடங்கள் – அரசிடம் கோரிக்கை!!
தமிழக்தில் உள்ள அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை மற்ற பாடங்கள் போன்று கட்டாய பாடம் ஆக்க வேண்டும் என 60,000 கணினி அறிவியல் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கணினி அறிவியல் ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2011 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் சமச்சீர் பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டது. மேலும் கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணினி அறிவியல் பாடத்தை 1 ஆம் வகுப்பில் இருந்தே கற்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
ஆனால் கணினி அறிவியல் பாடம் குறித்த முக்கியத்துவத்தை மாணவர்கள் உணராமல் உள்ளனர். அண்டை மாநிலங்களில் கணினி அறிவியல் தனி பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகளிலும் கணினி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றால்தான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியும். ஆனால் தமிழக அரசு பல முறை கோரிக்கைக்கு பிறகே கணினி அறிவியல் பாடத்தை 6 ஆம் வகுப்பு முதல் கொண்டு வந்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை – துணைநிலை ஆளுநர் உத்தரவு!!
அரசின் திட்டம்:
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவந்தால் கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். அரசு ஆசிரியர்களை நியமிக்காமல், மற்ற பிரிவு ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தலாம் என திட்டமிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் 143 தேசிய விருதுகள் – ஊரக வளர்ச்சித்துறை முன்னிலை!!
ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு தனித்தனியாக ஆசிரியர்கள் உள்ளது போல கணினி அறிவியல் ஆசிரியர்களும் தனியாக நியமிக்க வேண்டும். இதற்காக பல ஆண்டுகளாக B.Ed., முடித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறோம். சுமார் 60,000 ஆசிரியர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளதாகவும் அவர்களுக்கு அரசு பள்ளிகளில் நியமனம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்