தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது” – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் ஆண்டுதோறும் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வருபவர்களுக்கு “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு டாக்டர்.அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் விருது:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தங்களை ஈடுபடுத்தி கொண்டு தொண்டு ஆற்றி வரும் தொண்டர்களை கருத்தில் கொண்டு அவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் டாக்டர். அம்பேத்கர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான டாக்டர்.அம்பேத்கர் விருது பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய முழு விவரங்களை www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் விஐபி தரிசனம் ரத்து – அமைச்சர் சேகர் பாபு அதிரடி!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் அல்லது ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.11.2022 தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.