தமிழக அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!!
2009 ஆம் கல்வியாண்டில் எம்.பில் முடித்த கௌரவ விரிவுரையாளர்களை, உதவி பேராசிரியர் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் அனுமதிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உதவி பேராசிரியர்கள் தேர்வு:
தமிழக அரசின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை கௌரவ விரிவுரையாளர்கள் கொண்டு நிரப்ப அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தகுதியுள்ள பேராசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த பணியில் 2009 ஆம் ஆண்டிற்கு முன் எம்.பில் முடித்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கௌரவ விரிவுரையாளர் ஒருவர் கூறுகையில், “சுமார் 15 ஆண்டுகளாக UGC பரிந்துரையின் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 800 பேர் பணிபுரிந்து வருகிறோம்.
மத்திய அரசின் ‘பசு அறிவியல் தேர்வு’ – யுஜிசி புதிய உத்தரவு!!
ஆனால் தற்போது பணிவரன் முறைப்படுத்துதல் மூலமாக கௌரவ விரிவுரையாளர்களை தேர்வு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் பிஹச்டி, செட், நெட் ஆகிய தகுதிகளுடன் 5 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தவர்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டுக்கு மேல் எம்.பில் முடித்தவர்கள் யுஜிசி விதிமுறைகளின்படி தகுதியானவர்கள் என உத்தரவிட வேண்டும். 15 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் எங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு பணி வழங்க வேண்டும்”, என கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்