கவுரவ விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இயக்குனர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
கவுரவ விரிவுரையாளர் ஊதிய உயர்வு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, இளங்கலை & முதுகலை மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
‘ஆல் பாஸ்’ அறிவிப்பு, தனி தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
பல நாட்களாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது உயர்கல்வி இயக்குனர் அரசு கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 4084 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி ரூ.15,000 ஊதியமாக பெற்றுவந்த அவர்களுக்கு தற்போது ரூ.20,000 ஆக மதிப்பூதியம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்