தமிழக அரசு கல்லூரியில் 500 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் – நியமனம் வழங்க எதிர்ப்பு!!

0
தமிழக அரசு கல்லூரியில் 500 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் - நியமனம் வழங்க எதிர்ப்பு!!
தமிழக அரசு கல்லூரியில் 500 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் - நியமனம் வழங்க எதிர்ப்பு!!
தமிழக அரசு கல்லூரியில் 500 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் – நியமனம் வழங்க எதிர்ப்பு!!

தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 500 அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் பணி நிரந்தரம் வழங்க அறிவிப்பு வெளியானதால் பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கௌரவ விரிவுரையாளர்கள் அறிவிப்பு:

தமிழகத்தின் 130க்கு மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அதில் மொத்தம் 3500 கௌரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்ப அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால் பள்ளிகளை மூட தேவையில்லை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!

அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது என தகவல் வெளியானது. இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், “பணி நிரந்தம் அறிவிக்க நடத்தப்படும் மத்திய மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், முனைவர் பட்டம் பெற்று 3500 பேர் தனியார் கல்லூரிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பல நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

பொறியியல் மாணவர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் – அண்ணா பல்கலை திட்டம்!!

ஆனால் கொரோனா காரணமாக அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது. தற்போது அரசு கல்லூரிகளில் உள்ள 500 கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க ரகசியமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். பணி நிரந்தரம் TNPSC, TRP தேர்வுகள் மூலமாகவே நடத்தப்பட வேண்டும். இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு இந்த நிரந்தரபடுத்தும் பணி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!