தமிழக அரசு கல்லூரிகளில் 2,331 பணியிடங்கள் – உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் (TRB) மூலமாக நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டாகார்டினை வழங்கினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “இந்தியாவிலேயே உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் தமிழகம் அதிகமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 பணியிடங்களை நிரப்ப பணிகள் நடந்து வருகிறது. மேலும் அரசு கல்லூரிகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
13,625 கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா கார்டுகள் – அமைச்சர் பேட்டி!!
இருந்த போதிலும் மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்ட அரசு, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துள்ளனர். மேலும் இந்தியாவே வியந்து பார்க்கும் அளவில் தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 49 சதவிகிதமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் 26.3 சதவிகிதம் மட்டுமே உள்ளது”, என அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்