தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 – மே 10 முதல் வழங்கல்!!
தமிழகத்தில் வரும் மே 10 ஆம் தேதி முதல் அரிசி அட்டைதார்களுக்கு 4000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணம்
தமிழகத்தில் 159 தொகுதிகளில் அமோகமாக வெற்றி பெற்று திமுக ஆட்சியினை பிடித்துள்ளது. நேற்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். பின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில் ஒன்று தான் மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கும் திட்டம்.
மே 8 காலை 5 மணி முதல் வார இறுதி ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!!
இந்த திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வரும் மே 10 ஆம் தேதி முதல் அரசி அட்டைதாரர்கள் 4000 ரூபாயின் முதல் தவணையாக 2000 ரூபாயினை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 10 ஆம் தேதி முதல் தினசரி 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை முதல்வர் முக ஸ்டாலின் மே 10 ஆம் தேதி துவக்கி வைப்பார் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் நேரடியாக சென்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மக்களுக்கு முறையாக பணம் கிடைத்துள்ளதா என்பதை கண்காணிக்க தாசில்தார் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்