இசை கலைஞர்களுக்கு ஊதியத்தொகை அதிகரிப்பு- தமிழக அரசு அறிக்கை!!!
அறநிலைத்துறை சார்பாக திருக்கோவில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் வாசிக்கும் இசை கலைஞர்களுக்கான மாத ஊதியம் தொகையை மூன்று மடங்காக உயர்த்த போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இசைக்கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் இந்து அறநிலைத்துறை சார்பாக ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருக்கோவில்களில் உள்ள இசைக்கலைகர்களுக்கு மாத ஊதிய தொகையை மும்மடங்காக அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
இதைத்தொடர்ந்து, நாதஸ்வர கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.1500-லிருந்து ரூ.4500 ஆகவும், தவில் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.1000 லிருந்து ரு.3000 ஆகவும், மேலும், தாளம் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.750 லிருந்து ரூ.2250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இசை கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |