தமிழகத்தில் பள்ளிகள் திறந்தபின் சத்து மாத்திரைகள் வழங்க ஏற்பாடு – ஆலோசனை கூட்டத்தில் முடிவு!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் முதல்கட்டமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் முதல் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி வழங்கியது. அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் – அண்ணா பல்கலையில் 276 காலியிடங்கள்!!
ஆனால் நடப்பு கல்வியாண்டு தொடங்கி பல மாதங்கள் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதன்படி அந்த மாணவர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது, அதில் 80% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்கலாம் என்று கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
பெற்றோர்களின் கருத்து குறித்த தொகுப்பு அனைத்து பள்ளி முதன்மை அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்று மாலை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்