தமிழகத்தில் மேலும் 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அரசு அனுமதி!!
தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்த தமிழகத்தில் 3 இடங்களில் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஜல்லிக்கட்டு:
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை அன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் சேலம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
10& 12th மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு : அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 50 சதவிகித பார்வையாளர்களுடன் மட்டுமே இந்த போட்டியை நடத்த வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ப்பட வேண்டும். மாடுகள் முன்பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் வாடிவாசல் அமைக்கப்பட வேண்டும் போன்ற வழிமுறைகளை அறிவுறுத்தி உள்ளது.
திருவள்ளுவர் திருநாள் & தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 – தமிழக அரசு அறிவிப்பு!!
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயபுரத்திலும், சேலம் ஆத்தூர் அருகே கூலமேட்டிலும், திருச்சி திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அரசு தடை விதித்தது. அதன்பின் 2017 ஆம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியது, நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பின் தடை விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்