தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் – இறையன்பு ஐஏஎஸ் நியமனம்!!
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் இன்று அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய ஆட்சி
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், திமுக 159 தொகுதிகளில் பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெற இருக்கின்றது. இன்று காலை தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி – ஆளுநர் பதவிப்பிரமாணம்!
இதனை அடுத்து தனது முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதே போல் நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டமன்றம் கூட இருக்கின்றது. இன்று தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்னதாக அந்த பதவியை வகித்து வந்த ராஜிவ் ரஞ்சன் தமிழக செய்தித்தாள் & காகித நிறுவனத்தின் இணை இயக்குனராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறையன்பு அவர்களுக்கு தற்போது பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இறையன்பு அவர்கள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். ஐஏஎஸ் மட்டும் அல்லாது ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர் என்று இவருக்கு பன்முகங்கள் உண்டு. இவர் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் பணி அமர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. அதே போல் இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியாளராகவும், சுற்றுலா துறை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்