தமிழகத்தில் புனித வெள்ளி (ஏப்ரல் 2) விடுமுறை ரத்து – தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை!!

0
தமிழகத்தில் புனித வெள்ளி (ஏப்ரல் 2) விடுமுறை ரத்து - தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை!!
தமிழகத்தில் புனித வெள்ளி (ஏப்ரல் 2) விடுமுறை ரத்து - தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை!!
தமிழகத்தில் புனித வெள்ளி (ஏப்ரல் 2) விடுமுறை ரத்து – தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் 2 முதல் 4 ஆம் தேதி வரை அரசு கருவூலங்கள் இயங்கும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் பல முன்னணி அரசியல் கட்சியினரும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து நிறுவனங்களிலும் ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு – டிஜிபி அறிக்கை!!

இந்நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி தினம் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக அன்று அரசு விடுமுறை நாளாகும். ஆனால் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அனைத்து அரசு கருவூலங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பினை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!