தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் கவனத்திற்கு – வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் நகைக் கடன் பெற தகுதியானவர்களுக்கு இன்னும் அவர்களின் நகைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் அந்த நகைகளை பெற்று விட்டதாக கூட்டுறவு அலுவலகத்தில் தெரிவித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த கூட்டுறவு அதிகாரிகள் மீது புகார் அளித்து வருகின்றனர்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு தங்களின் தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் பெற்ற நகைக்கடன்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம் என்று கூறி இருந்தனர். அதனை போலவே அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் முதலில் தமிழக முதல்வர் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டமும் ஒன்று. அதன் பின்னர் மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தினர். மேலும் இந்த திட்டத்தில் 5 பவுன் அளவு உள்ள நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – பிரதமரின் அதிரடி முடிவு என்ன?
இந்த நிலையில் தற்போது நகைக்கடன் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால், திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் தப்பளாம் புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 15 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து, தமிழக அரசிடம் இருந்து நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்தவுடன் இங்கு நகைக்கடன் பெற்ற விவசாயிகளுக்கு அவர்களின் நகைகள் தள்ளுபடி செய்து தரப்படும் என்று கூறி இருந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 10 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நகைக்கடன் ரத்து செய்யப்பட்டது. மேலும் மற்ற விவசாயிகள் சிலர் நகை ரசீது தொலைந்து விட்டால் அதற்கு மாற்றாக பத்திரம் எழுதிக் கொடுத்து நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது மொத்தம் 156 நபர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதில் 148 நபர்களுக்கு நகைகள் திரும்ப கொடுக்கப்பட்டு விட்டது. மீதம் 8 விவசாயிகளுக்கு மட்டுமே, நகை கொடுக்கப்பட வேண்டும் என்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.