தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தொடரும் குளறுபடி! பயனர்கள் ஷாக்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் இதற்கு பல்வேறு நிபந்தங்கள் விதிக்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது தகுதி இருந்தும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட வில்லை என்று பயனாளிகள் புகார் அளித்துள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் தள்ளுபடி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் குவிந்தன. அதனால் நகைக்கடன் தள்ளுபடி பெற பயனாளிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைக்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்த 48 லட்சம் நபர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
தினமும் ரூ.7 சேமித்தால் மாதம் ரூ.5000 ஓய்வூதியம் – முதலீடு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
இதில் 13 லட்சம் பேர் மட்டுமே கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது பல்வேறு இடங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலூர் கூட்டுறவு நகர வங்கியில் அரசு விதித்த நிபந்தனைகளின் படி 636 பேர் ரூ. 2 கோடி மதிப்புள்ள நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதியான 636 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யாமல் மிகவும் அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. மேலும் பயனாளி ஒருவர் இது குறித்து கூறியதாவது, அரசு விதித்த நிபந்தனைகளின் படி அரசு ஊழியராகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவராக இருக்க கூடாது.
Exams Daily Mobile App Download
அதே போல் இங்குள்ளவர்கள் அனைவரும் விவசாயிகள். அரசு விதித்த நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் ஆனாலும் 3 மாதங்களாக தள்ளுபடி வழங்கமால் அலைய வைப்பதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு கூறியதாவது, தகுதியான பயனாளிகளின் பட்டியல் உயர் அதிகாரிக்கு அனுப்பி உள்ளதாக கூறினார். அத்துடன் அரசு அனுப்பியுள்ள ஆணையில் 2021 மார்ச் 25 முதல் மார்ச் 31 வரை 7 நாட்களில் 6 பேருக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவறாக உள்ளதாகவும் இது குறித்து ஆராய அரசு 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.