சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரண தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,200 க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ 80 அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்துகொண்டும், குறைந்து கொண்டுமாய் இருக்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நகைப் பிரியர்கள் தங்க நகை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் பாதுகாப்பான திட்டமாகவும், எதிர்காலத்தில் அதிக லாபம் தரும் திட்டமாகவும் இல்லத்தரசிகள் எண்ணுகின்றனர். மேலும், கொரோனா காலகட்டத்தில் இருந்து தான் தங்கத்தின் விலை ரூ.30,000 க்கும் மேல் உயரத் துவங்கியுள்ளது.
ஜூன் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.40,000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் பாதிப்படைந்துள்ளதால் பங்கு சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775 க்கு விற்பனையானது.
Exams Daily Mobile App Download
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10அதிகரித்து ரூ.4,785க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.67.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு அட்சயதிரிதியின் பொழுது தங்கத்தின் விலை ரூ.856 அளவுக்கு குறைந்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் 80 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் சோகமடைந்துள்ளனர்.