சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாட்களில் சவரனுக்கு ரூ.736 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
தங்க விலை
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தங்கத்தை வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அத்துடன் தங்கத்தின் மீது முதலீடு செய்வதன் மூலமாக அதிகமான அளவு லாபத்தையும் பெற முடிகிறது. அதன் தொடர்ச்சியாக அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து, விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் குறிப்பாக கடந்த அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்தது.
மாதம் ரூ.3,000 வழங்கும் PM கிசான் யோஜனா ஓய்வூதிய திட்டம் – முக்கிய தகவல்கள் இதோ!
இதையடுத்து கடந்த 19ம் தேதி அன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,040க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 5 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.736 வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 20ம் தேதி சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து ரூ.38,344க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் கடந்த 21ம் தேதியும் சவரன் ரூ.192 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை ஆனது. இதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 38,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14 உயர்ந்து 4,831 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல் வெள்ளியின் விலை கிராம் 66.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை இனி வரும் காலங்களிலும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.