சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ரூபாய் 384 குறைந்து சவரனுக்கு ரூ.38,840 என்று விற்பனை ஆகி வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மிகவும் ஆர்வத்துடன் நகைகளை வாங்கி மகிழ்ந்து வருகின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை:
உலகில் பல நாடுகளிலும் கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. அதனால் பல வார்த்தகங்களும் செயலில் இல்லாமல் போனது. அதில் மிகவும் முக்கிய ஒன்றாக ஆபரணத் தங்கமும் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனால் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் உக்ரைன் நாடு போரில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் தற்போது வரை தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் என்னென்ன?
இதனால் நகைப்பிரியர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர். அதனை தொடர்ந்து சமீபத்தில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், நகைப்பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து உள்ளது.
Exams Daily Mobile App Download
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 67.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் நிபுணர்கள் பலர் மீண்டும் கொரோனா பரவல், உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக மீண்டும் தங்கத்தின் விலை உயரும் என்று கூறியுள்ளனர்.